ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையில் இராமாயண இதிகாச
வரலாற்றுச் சிறப்புமிக்கதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே
அமையப் பெற்றதுமான ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலய மகா கும்பாபிஷேகம்
எதிர்வரும் வைகாசி திங்கள் 29ம் நாள் (12.06.2013) அன்று நடைபெற திருவருள்
கைகூடியுள்ளது.
கிரியைகள் யாவும் 03.06.2013 அன்று ஆரம்பமாகி,
ஆனி மாதம் 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களில் பக்தர்கள் எண்ணைக்காப்பு
சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
12.06.2013 அன்றைய தினம் எம் பெருமான் ஸ்ரீ
மாமாங்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா
கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
நடைபெறவுள்ள கிரிகை விபரங்கள்
நடைபெறவுள்ள கிரிகை விபரங்கள்
திகதி | நேரம் | விடயம் |
03.06.2013 | காலை 06.00 மணி முதல் | கிரிகைகள் ஆரம்பம் |
08.06.2013 | இரவு 09.30 மணி | யாகங்கள் ஆரம்பம் |
இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை | தூபிஸ்த்தாபனம் தீபஸ்த்தாபனம் யந்திரஸ்த்தாபனம் விம்பஸ்த்தாபனம் |
|
09.06.2013 | பகல் 11.00 மணி முதல் | எண்ணைக்காப்பு |
10.06.2013 | ||
11.06.2013 | பி.ப 3.00 மணி வரை | |
12.06.2013 | காலை 09.30 – 10.45 | ருத்திர விமான அபிஷேகம் |
காலை 11.00 மணி முதல் 11.45 மணி வரை | மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் |
பின்னர் மண்டலாபிஷேக பூசைகள் 48 நாட்களும் பிற்பகல் 6.00 மணி முதல் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறவுள்ளன. மண்டலாபிஷேக பூசை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மகா கும்பாபிஷேகத்திற்கு தங்களாலான நிதியுதவி,
பொருளுதவி, சரீர உதவிகளை செய்து எம்பெருமான் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார்
பேரருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.இதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறவுள்ளன. மண்டலாபிஷேக பூசை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வங்கிக் கணக்கு இலக்கம் : 2700575 BOC மட்டக்களப்பு.
தொலைபேசி : 065 222 3578