ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையில் இராமாயண இதிகாச
வரலாற்றுச் சிறப்புமிக்கதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே
அமையப் பெற்றதுமான ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலய மகா கும்பாபிஷேகம்
எதிர்வரும் வைகாசி திங்கள் 29ம் நாள் (12.06.2013) அன்று நடைபெற திருவருள்
கைகூடியுள்ளது.
கிரியைகள் யாவும் 03.06.2013 அன்று ஆரம்பமாகி,
ஆனி மாதம் 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களில் பக்தர்கள் எண்ணைக்காப்பு
சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
12.06.2013 அன்றைய தினம் எம் பெருமான் ஸ்ரீ
மாமாங்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா
கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
நடைபெறவுள்ள கிரிகை விபரங்கள்
நடைபெறவுள்ள கிரிகை விபரங்கள்
திகதி | நேரம் | விடயம் |
03.06.2013 | காலை 06.00 மணி முதல் | கிரிகைகள் ஆரம்பம் |
08.06.2013 | இரவு 09.30 மணி | யாகங்கள் ஆரம்பம் |
இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை | தூபிஸ்த்தாபனம் தீபஸ்த்தாபனம் யந்திரஸ்த்தாபனம் விம்பஸ்த்தாபனம் |
|
09.06.2013 | பகல் 11.00 மணி முதல் | எண்ணைக்காப்பு |
10.06.2013 | ||
11.06.2013 | பி.ப 3.00 மணி வரை | |
12.06.2013 | காலை 09.30 – 10.45 | ருத்திர விமான அபிஷேகம் |
காலை 11.00 மணி முதல் 11.45 மணி வரை | மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் |
பின்னர் மண்டலாபிஷேக பூசைகள் 48 நாட்களும் பிற்பகல் 6.00 மணி முதல் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறவுள்ளன. மண்டலாபிஷேக பூசை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மகா கும்பாபிஷேகத்திற்கு தங்களாலான நிதியுதவி,
பொருளுதவி, சரீர உதவிகளை செய்து எம்பெருமான் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார்
பேரருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.இதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறவுள்ளன. மண்டலாபிஷேக பூசை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வங்கிக் கணக்கு இலக்கம் : 2700575 BOC மட்டக்களப்பு.
தொலைபேசி : 065 222 3578
//ஒவ்வொரு மதத்திலும் குறிப்பிட்ட சில மகான்கள், சித்தர்கள் கடவுளாக மதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக இஸ்லாம் என்று எடுத்துக் கொண்டால் நபிகள் நாயகம்//
ReplyDeleteஇது என்ன புது கதைய இருக்கு .. உலகத்தில் எந்த முஸ்லிமும் முஹம்மது நபியை கடவுள் என சொன்னதில்லை . இஸ்லாமும் சொன்னதில்லை . ஏன் இப்படி எதாவது எழுதணும் என்று எழுதுவீர்களோ ? வேண்டுமென்றால் இப்படி சொல்லுங்கள் , தர்காக்களில் மாகன்களை வழிபடுகிறார்கள் என்று, இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. என்றாலும் , இஸ்லாத்தில் இணைந்த முன்னாள் ஹிந்துக்களில் பழக்கம் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படுகிறது அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் என்றே சொல்லலாம் . ஆக எதையும் எழுதுவதற்கு முன்பாக முழுவதுமாக தெரிந்து கொண்டு எழுதுங்கள் . இஸ்லாம் படைத்தவனை மட்டுமே வணங்க சொல்கிறது படிப்பினைகளை அல்ல.
அனைத்து மதத்தினரையும் அரவனைத்துச் செல்லும் தங்களின் உயர்ந்த நோக்கம் புரிகிறது.ஆனால் ஆர்வக்கோளாறு காரணமாக இஸ்லாம் குறித்து தாங்கள் தவறாக எழுதியிருக்கிறீர்கள். இஸ்லாம் நபிகள் நாயகத்தை கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை.
ReplyDeleteமாறாக நபிகள் நாயகம் அவர்கள் தம்மை எப்போதும் இறைவனின் அடிமை என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறினார்கள்.
மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது மனிதன் மனிதன் தான். கடவுள் கடவுள் தான்.
கடவுளின் இலக்கணமாக உலகப் பொதுமறை
இப்படி கூறுகிறது
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1)
اللَّهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2)
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)